மிருகத்தின் ஆன்மாவை மேவுதல்
நான்
குறைந்தபட்சம் ஒரு மனிதன்
பழுப்பு வண்ணத்தை அடைந்துவிட்ட
என் கண்கள்
இந்த உலகின்
புராதன நீதிகளை தொழுகிறது
ஆனால் அதன் நீரடியில்
வெளியே கேட்காமலே அடங்குவது
ஒரு கலகக்குரல்…
நான் தொழும் தெய்வத்திற்கோ
இந்த உலகின் சம நிலையை
காக்க வேண்டிய கடமையிருக்கிறது
தெய்வத்திற்கும் எனக்குமான சமர்
ஒரு இருதயத்தின் தசை அளவைக்குள்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
அப்போது எனது
கண்ணீர்த்துளிகள் விலையுயர்ந்தவை….
தெய்வம் பிதற்றும் நீதியை
முழுக்கவும் கண்ணீர்த் துளிகள் மறுக்கின்றன
தெய்வங்கள் சிலைக்குள்
வசிக்காத காலத்தில்
தெய்வத்திற்கு எதிரான சங்கீதம்
ஒலிக்கிறது
அப்போது ஒரு மிருகம்
தெய்வத்தின் ஆன்மாவை மேவுகிறது
நான்
மிருகத்தின் ஆன்மாவை மேவுகிறேன்
அக்கணம் வரலாற்றில் தட்டையாகவிருந்தது
எனபது கடந்தகாலம்.
நான்
குறைந்தபட்சம் ஒரு மனிதன்
பழுப்பு வண்ணத்தை அடைந்துவிட்ட
என் கண்கள்
இந்த உலகின்
புராதன நீதிகளை தொழுகிறது
ஆனால் அதன் நீரடியில்
வெளியே கேட்காமலே அடங்குவது
ஒரு கலகக்குரல்…
நான் தொழும் தெய்வத்திற்கோ
இந்த உலகின் சம நிலையை
காக்க வேண்டிய கடமையிருக்கிறது
தெய்வத்திற்கும் எனக்குமான சமர்
ஒரு இருதயத்தின் தசை அளவைக்குள்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
அப்போது எனது
கண்ணீர்த்துளிகள் விலையுயர்ந்தவை….
தெய்வம் பிதற்றும் நீதியை
முழுக்கவும் கண்ணீர்த் துளிகள் மறுக்கின்றன
தெய்வங்கள் சிலைக்குள்
வசிக்காத காலத்தில்
தெய்வத்திற்கு எதிரான சங்கீதம்
ஒலிக்கிறது
அப்போது ஒரு மிருகம்
தெய்வத்தின் ஆன்மாவை மேவுகிறது
நான்
மிருகத்தின் ஆன்மாவை மேவுகிறேன்
அக்கணம் வரலாற்றில் தட்டையாகவிருந்தது
எனபது கடந்தகாலம்.
Comments