Skip to main content

பால்ய பருவமென்பது..





உங்கள் பால்யத்தைக் கேட்டால்,
நீங்கள்
கூடைச்சேருள் அமர்ந்து சிரிக்கும் ஒரு குழந்தையையோ
விறைத்த ட்ரவுசரும்,விறைத்த முகமுமாய்
சீருடையில் நிற்கும் ஒரு பள்ளிச்சிறுவனையோ காட்டுகிறீர்கள்.
ஒருவன் தன் கல்லூரி ஆல்பத்தைக் காட்டுகிறான்.
அதில் அவன் பல் முப்பத்திரண்டும் தெரிகிறது.
நான் நேற்று காலை எடுத்த என் புகைப்படத்தைக் காட்டுவேன்.

பால்யத்தின் வாகனத்திலேறி
பால்யத்தின் கனவுகளோடு
தொலைதூர மலைவெளிக்கு போகிறது ஒரு காதல்.
அது கட்டிக்கொள்ள
எண்ணற்ற கொண்டை ஊசி வளைவுகளை சமைத்து வைத்தீரே,
வாகனத்தில் நிரப்பப்பட்டிருக்கும்
பால்யத்தின் காற்றை
அது வீடு திரும்பும் வரையிலேனும்
பிடுங்கி விடாதிருப்பீரா ஆண்டவரே..
நம் இனிப்பினிப்பான கற்பனைகள்
ஒரு முடிவுக்கு வரும் தறுவாயில்
கூடைச்சேர்கள் காலொடிந்து சரிகின்றன.
நம் குழந்தைமையின் அமர்ந்தகோலம்
நடுநடுங்கியாடி
தொப்பென்று கீழே விழுகிறது

Comments

இசை, நீங்கள் கவிஞர் என்பதில் எனக்கு என்றைக்குமே சந்தேகம் இருந்ததில்லை.

வழக்கம்போல, நல்ல கவிதை.

“நண்பரே“என்ற விளிக்கப்படும் தகுதியை என்றேனும் பெறுவேன்?
” டா” வில் அழைக்கபடும் நாளுக்காக
காத்திருக்கிறேன்..
Anonymous said…
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

தமிழன் ஒரு இளிச்சவாயன். ‍ ஜடம்.
ரொம்ப நல்லா இருக்குங்க (உங்கள் பெயரும் தான்)
கவிதையின் இறுதியில் விண்ணுக்கும் மண்ணுக்கும் வியாபகமெடுத்து நிற்கிறான் இசை.கவிதையில் அவன் கொற்றம் நெடுநாள் வாழும்!!!
உருகுவேயிலும் இன்று
" சனிக்கிழமைதான்" போல
என் இனிய நண்பனே,

உங்கள் எல்லோரோடும் சேர்ந்து அந்த நாளைக் கொண்டாட முடியாத ஏக்கத்தை உங்களது பதிவு பல மடங்காக்கிவிட்டது.
இசை கூட்டத்தில் நல்ல பிள்ளையாக வெகு அமைதியாக இருந்தாரே என்?

சமயவேல்

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம