Skip to main content

வானம் - நீலம்

வானம் சிக்னலில் சிக்கிக் கொண்டது.
ஒரு பிச்சைக்கார சிறுமி
அதை நெருங்கி வந்து பிச்சை கேட்கிறாள்.
வானம் சிவப்பு விளக்கை வெறித்துக் கொண்டு நிற்கிறது.
அவள் தொட்டு தொட்டு நச்சரிக்க
எரிச்சலில்
ஃபேண்ட் பாக்கெட்டில் திணித்திருந்த பர்ஸை எடுத்து
அதில் சில்லரைகளைத் தேடியது.
அவை எங்கோ இடுக்கில் சிக்கிக்கொண்டிருந்தன.
எனவே வானம்
பர்ஸை ஒரு குலுக்கு குலுக்கியது
அப்போது உள்ளிருந்து தெறித்து விழுந்தது ஒரு யோனி.
கடவுள் கிருபையால் சிக்னல் எடுக்க
இன்னும் பத்து வினாடிகள் இருந்தன.
பதறித் துடித்த அது ஐந்து வினாடிகளுக்குள்
தவறவிட்டதை கைப்பற்றி விட்டது.
அருகிருந்த பேக்கரியில் தண்ணீர் பாட்டில் வாங்கி
அதை நன்றாக அலசி
தன் கர்ச்சீப்பால் துடைத்து உலர்த்தி
மீண்டும் பர்ஸில் பத்திரப் படுத்திக் கொண்டு கிளம்பியது.

நீலம் வழக்கமாக போகும் பேருந்தில்
இன்று கூட்டம் அதிகம்.
நிற்க கூட இடம் இல்லை.
எனவே அது ஒற்றைக் காலில் பயணித்தது.
உணவு இடைவேளையில்
பையை திறந்து பார்த்தால்
சாம்பார் டப்பாவும், தயிர் கிண்ணமும்
கழன்று பை முழுக்க சிந்தியிருந்தது.
அதன் ஈரமும் நாற்றமும் அதற்கு எரிச்சலூட்டியது.
அது அவசர அவசரமாக பையில் இருந்த பொருட்களை
எடுத்துப் பார்த்தது.
எல்லாவற்றிலும் ஈரம் படர்ந்திருந்த்து.
நல்ல வேளையாக
ஒரு தனிஅறையில்
பிளாஸ்டிக் கவருள் வைத்து
பத்திரமாக பின்னடிக்கப்பட்டிருந்த கறுத்த குறிக்கு
எதுவும் நேர்ந்திருக்கவில்லை.
அதை மட்டும் எடுத்து
தன் பிரத்யேக லாக்கரில் வைத்து பூட்டி விட்டு
நனைந்த பொருட்களையெல்லாம் ஃபேனுக்கடியில் வைத்து விட்டு
கேண்டீனுக்கு போகிறது நீலம்

Comments

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம