என் கண் இந்த உலகிற்கு நல்லதல்ல
என்று சொல்லி
உன் அறைக்கதவை அடித்து சாத்திக் கொண்டாய்.
வெளியேயும் பூட்டச் சொன்னாய்
ஜன்னல்கள் இரண்டையும் பூசி அடைத்தாய்
இப்போது அந்த அறையில்
சாப்பாட்டுத் தட்டை எறிய ஒரு சின்ன ஓட்டை இருக்கிறது.
அதன் வழியே கொஞ்சம் காற்றும் வந்துபோகிறது.
அவ்வப்போது நீ கேவி அழும் சத்தம்
கேட்க சகிக்கவில்லை.
உன் கண்களை போல் நீ அவ்வளவொன்றும் மோசமில்லை
தாரளாமாக நீ வெளியே நடமாடலாம்
உன் கண்களில் கொள்ளியை சொருகும் உதவிக்காய்
எப்போது வேண்டுமானாலும் என்னை அழை
இல்லையேல்
உள்ளேயே கிடந்தொழி பொறுக்கி
என்று சொல்லி
உன் அறைக்கதவை அடித்து சாத்திக் கொண்டாய்.
வெளியேயும் பூட்டச் சொன்னாய்
ஜன்னல்கள் இரண்டையும் பூசி அடைத்தாய்
இப்போது அந்த அறையில்
சாப்பாட்டுத் தட்டை எறிய ஒரு சின்ன ஓட்டை இருக்கிறது.
அதன் வழியே கொஞ்சம் காற்றும் வந்துபோகிறது.
அவ்வப்போது நீ கேவி அழும் சத்தம்
கேட்க சகிக்கவில்லை.
உன் கண்களை போல் நீ அவ்வளவொன்றும் மோசமில்லை
தாரளாமாக நீ வெளியே நடமாடலாம்
உன் கண்களில் கொள்ளியை சொருகும் உதவிக்காய்
எப்போது வேண்டுமானாலும் என்னை அழை
இல்லையேல்
உள்ளேயே கிடந்தொழி பொறுக்கி
Comments