தேங்காய்மூடி கச்சேரியின் முன்
ஒற்றை ஆளாய் அமர்ந்திருக்கிறேன்.
ஸ்ருதி சேரவில்லை...
தாளம் தட்டுகிறது....
வெள்ளி அடிக்கிறது...
என் அமர்ந்தகோலம் மாறவில்லை
ஒரு மகாவித்வான் எப்படி சொக்குவாரோ
அப்படியே தான் இவரும் சொக்குகிறார்
எங்கெங்கு சொக்க வேண்டுமோ அங்கங்கு.
அந்தப் பாடல் எழுந்து
பறக்கும் இடத்தில்
சரியாக, மிகச்சரியாக
பெட்டி போடுபவரும் சேர்ந்து கொள்கிறார்
சரியாக, மிகச்சரியாக
பெட்டி போடுபவரும் சேர்ந்து கொள்கிறார்
இரண்டு வெள்ளியும்
சேர்ந்தடிக்கையில்
என் மடி நனைந்து
விடுகிறது
கண்களை மூடிக்கொண்டு
தலையை உருட்டும்
இந்த தபெலாக்காரருக்கு
என்ன தெரிகிறதென்று
எனக்குத் தெரிகிறது
உள்ளதிலேயே பொடித்தேங்காய்ளாகப் பொறுக்கி
கேரிபேக்கில் போட்டு முடிச்சிடப்பட்டுக்
கொண்டிருக்கும்
இந்தக் கோவிலின்
கோபுரகலசத்தின் உச்சியில்
தீடீரென, எங்கிருந்து வந்ததென்றே தெரியாமல்
ஒரு மயில் வந்து குந்துகிறது.
Comments