என்பது போல
என் உடைந்த ரிமோட்டை
அந்தக் கடையின் டேபிளில் வைத்தேன்.
கடைக்காரர் அதை எடுத்துப் பார்த்தார்.
ஒரு குண்டு வெடித்தது போல
அது சிதறியிருந்தது.
”மன்னித்தோம்” என்பது போல
புது ரிமோட்டை எடுத்து டேபிளில் வைத்தார்.
''எப்படியென்றே தெரியவில்லை...
பீரோ மேலிருந்து
தானாகவே கீழே விழுந்து உடைந்து விட்டது “
என்று சொன்னேன்.
அப்போதும் அவர் இதழ்க்கடையில் புன்னகைத்தார்.
ரிமோட்டுகள் தன்னுயிரை ஈந்து
எத்தனையோ உயிர்களை காத்து வருகின்றன.
அவை நம் வாழ்வின் இருண்ட கதைகளை
தன் சிதைந்த உருவின் வழியே
ரகசியமாக
சொல்லி வைக்கின்றன.
மனித வாழ்வு எவ்வளவு விசித்திரமானதும், சிக்கலானதும்
என்பதை அறிந்து கொள்ள
மலைவெளிக்குள் நுழைந்து
குகை வழிக்குள் புகுந்து
ஒரு சிரைக்காத யோகியை போய் பார்க்கப்
போகிறீர்களா ?
நமது ரிமோட் கடைக்காரரைக் கேளுங்கள்...
அவர் சொல்வார் ஆயிரம்.
Comments