தங்கவேலுவின் காதல் முத்துவேலை அழைத்து
கோபமாக கத்தியது.
“ இந்த உலகத்தில் நீதி செத்துவிட்டது ” என்று சொன்னது.
முத்துலேல் தன் வாழ்வில் அநேகந் தடவைகள்
அந்த வசனத்தை கேட்டிருந்தார்.
“ ஆமாம்….ஆனால் இது ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது ” என்றார்.
“ அவளொரு நயவஞ்சகி ” என்றது.
நயவஞ்சகம் என்கிற சொல்லில் கூட
கொஞ்சம்
புளித்த வாடையடித்ததால்
அவர் பேச்சை திசைதிருப்ப முயன்றார்.
“ தமிழ்மூவர் “ கேட்டீர்களா ? “
என்று கேட்டு வைத்தார்.
தொலைபேசியின் மறுமுனையில் இருப்பது காதல்
அதுவும் ஆக்ரோச கதியில்.
பாவம், அதையவர் அறிந்திருக்கவில்லை.
” தமிழ் ஒரு புடலங்காய்…
அந்த மூவரும் சுரைக்காய்கள் “
என்று பதில்வரவே, முத்துவேல் அமைதியானார்.
பின் தன் பழைய நினைவுகளின் பாழண்டிய பக்கங்களை
புரட்டத் துவங்கியது அது.
அதில் நிலவுப்பயன் துய்த்த காட்சிகளும்,
கைநரம்பு அறுந்து இரத்தம் பீறிட்ட காட்சிகளும் வந்தன.
பழைய நினைவுகளின் புத்தகத்தை கையில் எடுத்ததுமே
அதன் கோபமும் ரோஷமும் பறந்து விட்டது.
“ க…..ள்…..ளீ .. “ என்று கொஞ்சியது.
அப்போது ஏதோ ஒரு சொரசொரத்த கரம்
தன் கன்னத்தை செல்லமாக கிள்ள,
முத்துவேல் அதை எரிச்சலில் தட்டிவிட்டார்.
அவர் நெளிகிறார்..
வளைகிறார் …
பெருமூச்செறிகிறார்…
கொட்டாவி விடுகிறார்…
அவர் அடிவயிற்றிலிருந்து கூட
எதோ ஒன்று குமட்டி வருகிறது.
எனினும்,
காலத்தை சற்று பின்னோக்கி ஓட்டிப் பார்த்தால்
அங்கு நாம் இதே காட்சியை திரும்பக்காண்கிறோம்.
ஆனால், அதில் தங்கவேலின் பாத்திரத்தில் நடித்திருப்பவர்
நமது முத்துவேல்.
கிள்ளப்பட்ட கன்னம் ஞானவேலுடையது.
ஞானவேலின் கதை எனக்குத் தெரியாது.
ஆனால் எனக்கு வடிவேலைத் தெரியும்.
அவர்தான் தங்கவேலின் கன்னத்தை கிள்ள இருப்பவர்.
Comments
??????????
:)))))))))))