வெள்ளையிலிருந்து எல்லா வண்ணங்களும் பிறக்கின்றன . குறிப்பாக எலுமிச்சைநிறமும் ரோஸ்கலரும் . வெள்ளைக்கலருக்கு விண்ணப்ப படிவம் இல்லை தேர்வுகள் ஏதுமில்லை அது நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது . வெள்ளைக்கலரை சிரிக்க வைக்க எத்தனை நகைச்சுவைகள் கடைந்தெடுக்கப்படுகின்றன . வெள்ளைக்கலரை மகிழ்விக்க எத்தனை கவிஞர்கள் இரா காக்கிறார்கள் . வெள்ளைக்கலரின் ஏடு பத்திலிருந்து நான்கைக் கழித்தால் ஐந்தென்கிறது . கண்டிப்பான தணிக்கையாளன் அதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறான் . வெள்ளைக்கலரின் முன்னே எத்தனை மனிதர்கள் உடைந்து சிதறுகிறார்கள் .