சுமாரான கொள்கைக்குன்று
ஊஞ்சலில் இருக்கிறது.
கொள்கைக்குன்றிற்கு
ஊஞ்சலில் சோலியில்லை.
இதுவோ சுமாரானது.
எனவே ஓயாமல் ஆடுகிறது.
சரியென்று முன்னாடி
தவறென்று பின்னாடி
நாமென்று முன்னாடி
நானென்று பின்னாடி
கடவுளென்று முன்னாடி
கிடவுளென்று பின்னாடி
நீதியென்று முன்னாடி
மயிரென்று பின்னாடி
ஆடியாடி
ஆடியாடி – அது
தலைசுத்திச் சாகுமுன்னே
ஆரேனும்
ஊஞ்சல் கயிரை
அறுத்து விட்டால் ஆகாதோ ?
நன்றி : காலச்சுவடு- பிப்ரவரி-2015
Comments