அவன் சரக்கேக்கம் தலைவிரித்தாடுகிறது.
நகரமோ கடுத்த காவலில் இருக்கிறது.
மனமோ தொட்டு தொட்டு நச்சரிக்கிறது.
ஒரு கார் வாங்கி
ஓட்ட ஒரு ஆள் வாங்கி
அப்படி “ஜம்மென்று” போக அவனுக்கு வாய்க்கவில்லை.
ஆகவே அவன்
அன்றைய தினத்தின் அரசியல், பொருளாதார, பூகோளக் காரணிகளை
ஆராயத் துவங்கினான்.
எல்லா காரணிகளும்
“ போனால் செத்தாய் ..” என்றே எச்சரிக்க
கடைசியில் அவன் கண்டறிந்தான் ஓர் உபாயம்
அது..
மேஜிக்கல் ரியலிசத்தை வணங்கிவேண்டி
ஒரு பெருச்சாளியாகி விடுவது.
Comments