அவள்
அழைத்த அப்பொழுது
ரயில்படிக்கட்டில் அமர்ந்திருந்தேன்.
வானத்தில் பூர்ணிமை பொங்கி வழிந்து
கொண்டிருந்தது.
அப்பொழுது அதனுடன் மட்டுமே பேசத்தோன்றியது
ஆகவே ஃபோனை எடுக்கவில்லை.
திரும்பவும் வந்த அழைப்பை
வேறு உலகத்திலிருந்து வந்து விழும் கல் போல்
உணர்ந்தேன்.
எனவே அதை துண்டித்துவிட்டேன்.
இன்னொரு நாள்
அழைக்கையில் அலுவலகத்தில்
பழைய ஃபைலொன்றை
தேடிக்கொண்டிருந்தேன்.
அவளை விடவும்
அப்படியொன்றும்
முக்கியமான ஃபைலில்லை தான்.
ஆனாலும் எடுக்கவில்லை.
மூன்றாவது முறையாக
அழைத்த போது
இரண்டு காரணங்களை
சொல்ல வேண்டியிருந்ததால்
எடுக்கவில்லை.
நான்காவது
முறைக்கு 3 காரணங்களையும்
ஐந்தாவது முறைக்கு
4 காரணங்களையும்
கண்டறிய வேண்டியிருந்தது.
அடுத்தடுத்த
அழைப்புகளில்
பிரியம்
பூதமென்றாகிவிட்டது.
விட்டுவிடவே கூடாத
அன்புதான்
ஆனாலும்
விட்டுவிட்டேன்.
எல்லாம் அந்த “
பூர்ணிமா” வை சொல்ல வேண்டும்!
நன்றி : ஆனந்த
விகடன்
Comments