இந்த முறை ஊடலல்ல…முறிவு.
“பட்” டென்ற சத்தத்துடன்
ஒட்ட முடியாதபடி உடைந்து விட்டது.
எழுந்து நின்று ஒரு முறை சடவு முறித்தேன்
“அப்பாடா…” சொன்னால்தான் ஒழுங்காக சடவு முறியும்
ஆகவே முறைப்படி இழுத்துச்சொன்னேன்.
ஐந்தாண்டுகளாக அடக்கியாண்ட தொப்பைக்கு விடுதலையளித்தேன்.
இனி மூச்சுப்பயிற்சிக்கு சோலி கிடையாது.
மீசைக்குள் கத்தரியுடன் குதிக்க வேண்டியதில்லை.
பெருவிரலில் மண்வெட்டி வளர்ந்தால்
நறுக்க வேண்டியதில்லை.
மண்டைக்குடுவையில் கண்டதையும் கலக்கி
பொய் செய்ய அவசியமில்லை.
நிலவு தன் சொந்த முகத்தோடு திகழ
இராத்திரியை கூட்டவோ குறைக்கவோ தேவையில்லை.
ஆகவே சேவல்கள் தப்பிப்பிழைத்து வாழும்
நாடெந்தன் நாடே!நன்றி : கல்கி தீபாவளி மலர்
Comments