காதலனொருவனுக்கு
“ கண்டார் உயிர் உண்ணும் கண் “
என்கிற வரியை வாசித்த மாத்திரத்தில்
மெய்நடுக்கம் கண்டு விட்டது.
அல்லும், எல்லும் அதையே
பிதற்றித் திரிந்தான்.
உண்கையில், உடுக்கையில்
குளிக்கையில், கழிக்கையில்
சொல்லி சொல்லிப்பார்த்தான்.
நடத்துனரிடம் பத்து ரூபாய் நீட்டி
உயிருண்ணும் கண்களைக் கேட்டான்.
பணியிடத்தில்
ஏத்துயேத்தென்று ஏத்தும் போதும்
உள்ளுக்குள் அக்கண்களை கண்டு நின்றான்.
அடேய்..மடதம்பி..!
அதிகாலை 5 மணிக்கு
எல்லா கண்ணும் பீளையுண்ணும் கண்.
Comments