கைகளற்ற ஒருவன்
தன் காலால்
திருவள்ளுவரை வரைந்து காட்டிவிட்டான்.
இதில் ஒரு சுவாரஸ்யம் கிட்டிவிட்டது.
எனவே
அவனுக்கு நமது நாளிதழ்களில் ஒரு போட்டோவும் கிடைத்து விட்டது.
சுவாரஸ்யமற்ற முடவர்கள்
சுவாரஸ்யமற்ற குருடர்கள்
சுவாரஸ்யமற்ற ஊமைகள்
மூத்திரச்சந்துகளில் ஒளிந்து கொள்கிறார்கள்.நன்றி : காலச்சுவடு : ஜுலை: 2016
Comments