Skip to main content

எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !

             




எல்லாம் முடிந்துவிட்டது வாணிஸ்ரீ !

கொண்டை சுற்றுவதில் வல்லவரான கடவுள்
ராணி ஸ்ரீயையும், நீலிஸ்ரீயையும்
உன்னோடே கலந்துகட்டி
என் முன்னே அனுப்பினார்
அதில் எந்தக் கொண்டை உன் கொண்டை
என்றறிவதில் 
பரிதாபமாகத் தோற்றுவிட்டேன் ...
எல்லாம் முடிந்துவிட்டது வாணிஸ்ரீ !


எவ்வளவு குடித்தாலும் 
ஒழுங்காக வீடு  சேர்ந்து விடுவேன்
லுங்கிவிலகி நான் ரோட்டோரம் கிடந்தது 
ஒரே ஒரு நாள்தான் ...
சரியாக, மிகச்சரியாக
அன்று தான் உன் வீட்டில்  தேங்காய்ச் சட்னி
தீர்ந்துவிட்ட  பொட்டுக்கடலையை வாங்கி வர
நீ அண்ணாச்சி கடைக்கு வந்தாய்...
ஏன் வாணி உன் வீட்டில் அன்று தக்காளி சட்னியாக
இருந்திருக்க கூடாது ?
எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !


அப்படி தக்காளிசட்னியாகவோ, கத்தரிக்காய் குழம்பாகவோ மட்டும்
இருந்திருந்தால்
இன்னேரம் நமது வசந்தத்து மாளிகையில்
இரண்டு “தேன்கள் ” ஓடியாடாதோ வாணிஸ்ரீ ?
எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !


கொஞ்சம் குடித்தால்தான்
அந்த அறையின் கதவுகள் திறக்கின்றன
அங்குதான் அந்த வீணை இருக்கிறது
அங்குதான் நீயும் இருக்கிறாய்
நீ வாசிக்கக்  கூட வேண்டாம் வாணிஸ்ரீ
வெறுமனே அது உன் தொடையில் இருந்தால் போதும் ...
இதையெல்லாம் கண் ஆரக் காணாமல்
கேவலம் ஈரலைப் போற்றி வாழ்வேனோ வாணிஸ்ரீ !


ஒரு முறை கூடத்  தொட்டுப் பார்த்திடாத
அதனாலேயே
ஆயுள் முழுக்க தொட்டுதொட்டுப் பார்க்கும்
உன் காந்தள் மெல்விரல் கைகளால்
தினம்  ஒரு குவளை வழங்கு ...
எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !

நேற்று பல் மருத்துவரை கண்டு வந்தேன்
கடைப்பல்லை முற்றாக பூச்சி அரித்து விட்டதாம்...
இனி அடைக்கவே முடியாதென்றும்
பிடுங்கியே தீர வேண்டும் என்றும் சொல்லி விட்டார்
எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !

ஒரு தொண்டுக்கிழம்
“ நான் தான் ஆனந்த் ...”
என்று முன் வந்து நின்றால்
ஊரார் எதில் நகுவார் வாணிஸ்ரீ ?

எல்லாம் முடிந்து விட்டது வாணிஸ்ரீ !


                        






















Comments

அப்பாடா... இதோடவாவது முடிச்சிட்டீங்களே ஆனந்த்.
அப்பாடா... இதோடவாவது முடிச்சிட்டீங்களே ஆனந்த்.

Popular posts from this blog

மலைக்கு அப்புறம் என்ன?

என் ஊருக்குப் பின்னே  ஒரு  மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம்  வாழ்வைக் கண்டு பிடிக்க  இப்படிக்   கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை  அடிவாரத்தில்  ஓர்  ஆட்டிடையன்   இருக்கிறான்  எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம்  ஆடென.                நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18

QUOTE - களின் காலம்

            1.       “ எதை நீ  கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு..."  என்கிற கோட்டின் வழியே  கடவுள் தன் சிம்மாசனத்தை உறுதி செய்து ஜம்மென்று   அமர்ந்துவிட்டார்.    2.        தேவனால் கூடாததும், அவன் வாக்கினால் கூடும். 3.     கன்னியாகுமரியின் சமுத்திர சத்தத்திற்கு மத்தியில்   எவ்வளவு கம்பீரமாக நிற்கிறது   ஒரு கோட் ! 4.     வையத்துள் வாழ்வாங்கு வாழ்கிறான் வால்டேர்     ஒரு கோட்டாக. 5         கோட்களின் காலம்  முடிந்து விடக்கூடாது என்பதற்காக         நிகழ்த்தப்பட்ட  திருவிளையாடல்தான்        பேப்பர்பாய்  ஜனாதிபதியான படலம்        6       வெறுங்கை என்பது மூடத்தனம் ; விரல்கள் பத்தும்   மூலதனம்     என்கிற கோட்டிலிருந்து     பிறந்து வந்தவைதான் இந்த நகரத்திலிருக்கும்     அத்தனை பேக்கரிகளும். 7.            எரிபொருள் இல்லாமலும் ஆட்டோக்கள் ஓடும் ;      ஆனால் கோட்களின்றி ஓடாது       என்பான் புத்திசாலி.      8.        இல்லத்து அரசியரே!      உங்கள் மனாளனின் அடிவயிற்றில்      ஓங்கி ஒரு உதை விட     பொன்னான

தெய்வாம்சம்

                                                                            தெய்வம் இருக்கிறதோ இல்லையோ “ தெய்வாம்சம்” என்கிற ஒன்று நிச்சயம் உண்டு. அந்த “ தெய்வாம்சம் “  கூடி வரப்பெற்ற கலைப் படைப்பென்று “ 96 “ திரைப்படத்தைச் சொல்லலாம். இல்லையெனில்  வள்ளலார் தனது “ தனிப்பெருங்கருணை “ என்கிற மகத்தான சொல்லை ஏன் கார்த்திக்நேத்தாவின் சிந்தைக்கு அருள வேண்டும்? “தனிப்-பெருந்–துணை “ என்கிற சொல்லாக்கம் கதையின் மையத்தைத் துல்லியமாகத் தொட்டு விடுகிறது. தவிர அந்தப்பாடல் முழுக்கவே காதலின் “ அருட்பிரகாசம் ” இறங்கியிருக்கிறது. நம்மில் பாதி அன்றாடத்தின் முடை நாற்றத்துள் கிடக்கிறது. மறுபாதியோ அதிலிருந்து தப்பியோட தருணம் பார்த்துக் காத்துக் கிடக்கிறது. அந்த வயலின் குச்சி நம்மை அழுக்குகளிலிருந்து தூக்கிக் கொண்டு வேறெங்கோ பறக்கிறது.     வாதைகளை ஏவி விடுவதில் வல்லவரான இளையராஜாவின் பாடல்கள் படத்தில் ஒரு முக்கியப் பாத்திரமாக மாறியிருக்கிறது. வாத்தியங்களோடு இசைக்கப்படும் பாடல்களில் ஒருவித “ திருவிழா தன்மையும் ” கலந்து விடுகிறது. அங்கு நாம் தொலைந்து போகிறோம். தனித்த மனிதக்குரலில் இருப்பதோ தன்னந்தனிம