" வாழ்க்க எப்படி இருக்கு "
என்று கேட்டாள்.
" அது கிடக்கு கழுத " என்றேன்.
பிறகு அவளும் நானும்
வாழ்க்கைக்கு வெளியே
பல மணிநேரம் பேசிக் கொண்டிருந்தோம்
இதையே பார்த்துக் கொண்டிருந்த நண்பனொருவன்
" வாழ்க்கடா" என்று காதில் கிசுகிசுத்து விட்டுப் போனான்.
அந்தத் தருணத்து மரத்தடியில் தோன்றிய ஞானம் என்னவெனில்,
வாழ்கைடா என்று வாழ்த்துப் பெறுவதற்கு ஒரே வழி
வாழ்க்கைக்கு வெளியே பேசுவது.
Comments