கட்டக்கடைசியில்
நான் உறுதிபூண்டு விட்டேன்
வாழ்வில்
இனி
மகிழ்ச்சி மட்டும்தான் என்று.
கிடார்
வாசிக்க
கிடார்
தேவையில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன்.
புகைக்க
நெருப்பு கட்டாயமில்லை
நாபிக்கமலத்தை
நுனிநாக்கால் வருடுவதற்கு
நாபிக்கமலமோ
நுனிநாக்கோ
அவசியமில்லை
என்பதை அறிந்துகொண்டேன்.
மலையுச்சியில்
நிலவொளியில் கிடக்க
மலையேற
வேண்டியதில்லை.
புனலாட
வேண்டும் என்று தோன்றிவிட்டால்
உடனே
ஆடைகளை
களைந்து விட வேண்டியதுதான்
கடல்நீர்
ஆவியாகி
பிறகு
மேகமாகி
எப்போது
அது மாரியாகி
எப்போது நமது ஆறுகளில் புதுவெள்ளம் பெருக்கெடுக்க?
நான் உறுதிபூண்டு விட்டேன்
இனி
மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. பூரணமகிழ்ச்சி!
எப்போது நமது ஆறுகளில் புதுவெள்ளம் பெருக்கெடுக்க?
நான் உறுதிபூண்டு விட்டேன்
இனி
மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. பூரணமகிழ்ச்சி!
Comments